உன்னை வரைய எத்தனிக்கும் போதெல்லாம்
எனது பென்சில்
விரிந்து பரந்த விண்ணையே வரைந்தன
தூரத்தில் சிறு விண்மீனாய் நானும்..
உனது குரலை பாட நினைக்கும் போதெல்லாம்
சமுத்திரக்காட்டின் ஓவென்ற இரைச்சலே
காதை நிறைக்கிறது
மூலையில் சிறு மீனின் பாடலாய் எனது பாடலும்..
புள்ளிகளை சேர்த்தேன் நான், கோலம் வந்தது
பூக்களை சேர்த்தேன் நான், மாலை வந்தது
வார்த்தைகளை சேர்த்தேன் நான், பாடல் வந்தது
வண்ணங்களை சேர்த்தேன் நான், வானவில் வந்தது
இவை அத்தனையும் சேர்த்தேன் நான்......
அம்மா நீ வந்தாய்
1 comments:
வாழ்த்துக்கள்..
Post a Comment
உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!