Tuesday, November 16, 2010

அவள்... அன்று...அது...



வலிந்து புனையப்பட்ட
காதலால்
வண்ணங்கள் வெளுத்துப்போன வாழ்வில்
சவுந்தர்யங்களை  தேடிக் களைக்கிறேன்...
 
காயங்களும் அது தந்த வலிகளும்
ஏமாற்றப்பட்டதை எழுதிக்காட்டி
ரணத்தை இன்னும் அதிகமாய் காட்டின...

அலுப்புகளின் முடிச்சுகளையெல்லாம்
அவிழ்த்தெறிந்து
ஆயிரமாய்
பட்டாம்பூச்சி எண்ணங்களை பறக்கவிட்டு
கிறங்கி நின்ற நாட்களெல்லாம்
"அன்றொருநாள்....."
என்று தொடங்கும் கதையாகிப்போனது....

இன்று
உள்ளங்கையை விரிக்கும்போது
உயிரற்ற பட்டாம்பூச்சி சிறகுகள் மட்டுமே
பெருமூச்சு காற்றில் சிதறிப் பறக்கின்றன ...

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in