Tuesday, December 21, 2010

எதுக்கு சொல்லணும் ஜெயமோகனுக்கு நன்றி

முன் கதைச் சுருக்கம்:
ஐஸ்வர்யா ராய்-க்கு முன்னும் பின்னும்   என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். நம்மைக் காட்டிலும் வலிமையான நாடுகள் நம் மீது எந்த
ஆக்கிரமிப்பையும் வெளிப்படையாக நடத்தாததால் நாம் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய் கருதிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் இது ஒரு மாயத் தோற்றமே. ஒரு இனம் இன்னொரு இனத்தை சுரண்டுவதற்கான முயற்சி என்பது மனிதகுலத்தின் இயல்பு என்பதே சரித்திரம் நமக்கு சொல்லித்தந்த உண்மை. அத்தகைய சுரண்டல் நம் மீதும் நம்மையறியாமல் நடத்தப்படுகிறது என்பதை நாம் உணரவில்லை என்ற எனது ஆதங்கத்தை பதிவு செய்வதே எனது நோக்கம். இதைப் பற்றி ஒரே பதிவில் விவரிப்பது என்பது கடினமான காரியம்.

Saturday, December 18, 2010

ஐஸ்வர்யா ராய்க்கு முன்னும் பின்னும்

ஐஸ்வர்யா ராய் என்ற பெயர் இந்தியாவின் அழகிற்கான குறியீடு. உண்மை என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் இப்படி ஒரு கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு ஆள் இழுத்தால் நகருமா தேர். ஊர் கூடி இழுத்தால் தான் நகரும். அப்படி ஊர் கூடி இழுத்த தேர் ஐஸ்வர்யா.

Wednesday, December 8, 2010

வரூம் ஆனா வராது...


கடந்த ஒன்பது மாதங்களில் ரூபாய் பத்தாயிரம் கோடி அளவிற்கு ஆன்லைன் வர்த்தகம் நடந்திருக்கிறதாம். அது என்ன ஆன்லைன் வர்த்தகம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டெர்நெட் வாயிலாக பொருள்களை விற்பது, வாங்குவது.

Tuesday, December 7, 2010

கர்மவீரரும் கருமம் பிடித்த வீரரும்

இப்பொழுது ஒரு வழியாக முட்டி முட்டி பார்த்துவிட்டு தங்களால் செய்வதற்கு ஏதுமில்லை என்ற தீர்மானத்துடன் மக்கள் ராஜா-ங்க ஊழலை மறக்க ஆரம்பித்திருப்பார்கள் என நினைக்கிறேன். வெளியே தெரியும் வெளிச்சத்திற்கு போக எண்ணி கண்ணாடி சன்னலை முட்டிமுட்டித் தோற்கும் விட்டில் பூச்சியைப்போல. மனதில் தைத்த இந்த ஊசி, ஏதோ ஒரு மூலையில் உறுத்தலாக வலித்துக்கொண்டே இருக்கும்.

சங்கமம்

Indiae

indiae.in
we are in