ஐஸ்வர்யா ராய்-க்கு முன்னும் பின்னும் என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டிருந்தேன். நம்மைக் காட்டிலும் வலிமையான நாடுகள் நம் மீது எந்த
ஆக்கிரமிப்பையும் வெளிப்படையாக நடத்தாததால் நாம் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய் கருதிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் இது ஒரு மாயத் தோற்றமே. ஒரு இனம் இன்னொரு இனத்தை சுரண்டுவதற்கான முயற்சி என்பது மனிதகுலத்தின் இயல்பு என்பதே சரித்திரம் நமக்கு சொல்லித்தந்த உண்மை. அத்தகைய சுரண்டல் நம் மீதும் நம்மையறியாமல் நடத்தப்படுகிறது என்பதை நாம் உணரவில்லை என்ற எனது ஆதங்கத்தை பதிவு செய்வதே எனது நோக்கம். இதைப் பற்றி ஒரே பதிவில் விவரிப்பது என்பது கடினமான காரியம்.